'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு


மத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிடவேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து,அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.
மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள் அனைவருக்கும்வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனை வரும்,தங்களின் ஆதார் எண்ணை, தங்களின் சர்வீஸ் புக் எனப்படும், பணிப்புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என, கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த உத்தரவு, எந்த அளவுக்கு நடைமுறைபடுத்தப் பட்டு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு, அனைத்து துறைகளின் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களின் பணிப்புத்தகத்தில், அவர்களின் பிறந்த தேதி,கல்வித்தகுதி, குடும்பம், சொத்து, வீட்டுக்கடன், சுகாதார காப்பீடு போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி