அதிக பாதுகாப்பு வசதியுடன் கூடிய புதிய ரூ.100 தாள் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

அதிக பாதுகாப்பு வசதியுடன் கூடிய புதிய ரூ.100 தாள் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய 100 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
வரிசை எண்ணின் கடைசி 6 இலக்கங்களின் அளவுகளும் ஏறுமுகமாக இருக்கும் வகையில் புதிய தாள்கள் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மொத்தமுள்ள 9 எழுத்துருக்கள் கொண்ட வரிசை எண்ணில் முதல் 3 எழுத்துருக்களும்ஒரே அளவில் இருக்கும் என்றும் இதற்கடுத்த 6 இலக்கங்களும் ஏறுமுகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையால் கள்ள நோட்டுக்களில் இருந்து நல்ல தாள்களை எளிதில் பிரித்தறிய முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 100 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்தாலும் பழைய தாள்களும் தொடர்ந்து செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதே முறை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களிலும் பின்னர் கொண்டு வரப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி