அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2015

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்ககால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த மே 6-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 5 என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணப்பங்கள் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்துப் படிப்பு மையங்களிலும் ரூ.800 கட்டணம் (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400) செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ஆன்-லைனில்விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதற்கான தொகையை வரைவோலையாக இணைத்தும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி