ஜூலை 1ல் கவுன்சலிங்: ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2015

ஜூலை 1ல் கவுன்சலிங்: ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மொத்தம் 412 இயங்கி வருகின்றன. இவற்றில் 15000 இடங்கள் உள்ளன. இவற்றில் 2300 இடங்கள் அரசு ஆசிரியர் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி) முடிவு செய்துள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம் 14ம் தேதி வினியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 4ம் தேதி வரை பெறப்பட்டன. இதுவரை 3350 பேர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்கள் 22ம் தேதி வெளியிட மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஜூலை 1ம் தேதி மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஒற்றைச் சாளர முறையின்(கவுன்சலிங்) கீழ் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி