நாளை முதல் 25ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

நாளை முதல் 25ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசு அறிவிப்பு

மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட அரங்கில் மாணவர்கள் வசதிக்காக 12 எல்.இ.டி. திரைகள், 5 கணினிகள், நிழற்கூடம், உணவு விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சென்ற ஆண்டுவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்த மருத்துவக் கலந்தாய்வு, மெட்ரோ ரயில் பணிகளை கருத்தில் கொண்டு ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடத்தப்படுவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி