வேளாண்மைப் படிப்புகளில் சேர 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 20-இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2015

வேளாண்மைப் படிப்புகளில் சேர 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 20-இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வேளாண்மைப் படிப்புகளில் சேர 29,825 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியவர்கள் அதில் உள்ள தவறுகளைச் சரி செய்து கொள்ள செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மாலை வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து,
விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.ஜூன் 27-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

பொதுப் பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 29 முதல், ஜூலை 11 வரையும், 2-ஆம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 15 முதல் 17-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி