ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்திருந்தது.
ஆனால், அதன்படி விநியோகிக்கப்படவில்லை.படிப்புக்கான வயது உச்ச வரம்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, சட்டப் படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் இந்திய பார் கவுன்சிலின் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில், தமிழகத்திலும் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன் காரணமாகவே விண்ணப்ப விநியோகம் தடைபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் வயது உச்ச வரம்பை நீக்குவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க சட்டப் பல்கைலக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகள், மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.எல்., முதுநிலை சட்ட பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்படும். மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
கட்டுப்பாடு நீக்கம்: தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில் மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என்று முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதேபோல ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு 20-லிருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஓராண்டு மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்திருந்தது.
ஆனால், அதன்படி விநியோகிக்கப்படவில்லை.படிப்புக்கான வயது உச்ச வரம்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, சட்டப் படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் இந்திய பார் கவுன்சிலின் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில், தமிழகத்திலும் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன் காரணமாகவே விண்ணப்ப விநியோகம் தடைபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் வயது உச்ச வரம்பை நீக்குவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க சட்டப் பல்கைலக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகள், மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.எல்., முதுநிலை சட்ட பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்படும். மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
கட்டுப்பாடு நீக்கம்: தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில் மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என்று முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதேபோல ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு 20-லிருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஓராண்டு மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி