'குரூப்-1' பதவியில் 74 இடங்களுக்கு இரு வாரங்களில் தேர்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

'குரூப்-1' பதவியில் 74 இடங்களுக்கு இரு வாரங்களில் தேர்வு அறிவிப்பு

'துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் - 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில் சப் -- கலெக்டர் - 3; டி.எஸ்.பி., - 33; வணிகவரி உதவி ஆணையர் - 33; ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் - 10 ஆகிய 79
காலியிடங்களுக்கான குரூப் -- 1 முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று துவங்கியது; நாளை வரை இத்தேர்வு நடக்கிறது; இதில் 4,282 பேர் பதிவு செய்து பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
சென்னையில் 43 மையங்களில் ஒன்றான என்.கே.டி., மகளிர் பள்ளியில் நடக்கும் தேர்வை டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர்.பின் பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி:இந்த தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களில் 80 சதவீதம் பேர் வந்துள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றுத்திறனாளி தேர்வர் ரமேஷுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.மற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் தரப்பட்டு உள்ளது; இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இரு மாதங்களில் வெளியாகும்.குரூப் - 1 பதவியில், காலியாக உள்ள துணை கலெக்டர் - 19; டி.எஸ்.பி., - 26; வணிகவரி உதவி ஆணையர் - 21; மாவட்டப் பதிவாளர் - 8 ஆகிய 74 காலியிடங்களுக்கு, இரு வாரங்களில் தேர்வு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி