பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2015

பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்' : அரசு உத்தரவு

பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற ஏழு மாணவியரை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்துவிட்டனர்.அரசு உத்தரவை காரணம் காட்டி பள்ளி தலைமை ஆசிரியர் பார்வையற்ற மாணவியரை திருப்பி அனுப்பினார்.
இதனால் அதிருப்தியடைந்த மாணவியரின் பெற்றோர்மற்றும் மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகிகள் முதல்வர் மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறையிடம் முறையிட்டனர்.இதையடுத்து அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் பார்வையற்ற ஏழு மாணவியரையும் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி