ஜூன் மாத இறுதிக்குள் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2015

ஜூன் மாத இறுதிக்குள் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான் இடங்களை நிரப்பும் வகையில் கடந்தமே 16,17-ம் தேதிகளில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது
.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இந்த பொது நுழைவுத் தேர்வை தமிழகம் முழுவதும்40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் ஜி.நாகராஜனிடம் கேட்டபோது, “மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி