தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையோடு (ஜூன் 4) முடிவடைகிறது. மாணவர் சேர்க்கைக்கானகலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி:
2015-16- ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.இதில் சேர விரும்பும் மாணவர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்படும். முதல் நாளில் சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
ஜூலை 2-ஆம் தேதி ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், பிற சிறுபான்மை மொழியில் படிக்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். 3-ஆம் தேதி தொழில் பிரிவினருக்கும், 4, 6-ஆம் தேதிகளில் கலைப் பிரிவு மாணவர்களுக்கும், 7 முதல் 10-ஆம் தேதி வரை அறிவியல் பிரிவுமாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி