எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2015

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது சில நாள்கள் தாமதமாகும் என்று தெரிகிறது.
தாமதம் ஏன்?:
மறுகூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் பெற விண்ணப்பித்துள்ள பிளஸ் 2 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்களைத் தொகுக்கும் பணியை தேர்வுத் துறை அதிகாரிகள் இப்போது செய்து வருகின்றனர்.
சில நாள்களில் இந்தப் பணி நிறைவடைந்து, மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்அடங்கிய சி.டி.யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தேர்வுத் துறை அதிகாரிகள் அளித்த பிறகே எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் தயாராகும்.எனவே, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி வரும் 12-ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிட வாய்ப்பில்லை.எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) வழங்குதல், தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது குறித்த தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.இ.க்கு ஜூன் 15-இல் ரேண்டம் எண்:
பி.இ. படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களான கணிதம்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களில் மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணைத் தொகுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இத்தகைய மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி. அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழுவிடம் சில நாள்களில் அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,54,000-த்துக்கும் மேற்பட்டமாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 15-ஆம் தேதி ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) வழங்கப்படும்; தேர்வுத் துறையிடமிருந்து மறு மதிப்பீட்டு மதிப்பெண் சி.டி. கிடைக்கும் நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 19-ஆம்தேதி பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று,அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி