குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார்
.ராதாகிருஷ்ணன் சென்னையில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்டமுதன்மை கல்வி அலுவலகத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதிய அதிகாரி, விடைபெற்று செல்லும் அதிகாரிக்கு ஆசிரியர் அமைப்பினர் சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே,குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா, அல்லது ராதாகிருஷ்ணனே முதன்மை கல்வி அலுவலராக தொடர்வாரா என்ற கேள்வி கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார்
.ராதாகிருஷ்ணன் சென்னையில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்டமுதன்மை கல்வி அலுவலகத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதிய அதிகாரி, விடைபெற்று செல்லும் அதிகாரிக்கு ஆசிரியர் அமைப்பினர் சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே,குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா, அல்லது ராதாகிருஷ்ணனே முதன்மை கல்வி அலுவலராக தொடர்வாரா என்ற கேள்வி கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி