கர்நாடகத்தில் அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்நாடகத்தில் உள்ள அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும். கர்நாடக கல்வித் துறை சேவை விதிகள் 2014-இன்படி, இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் பாட வாரியாக http:kea.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆக.5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.இதற்குரிய கட்டணத்தை ஆக.6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்தப் பதவிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும். கர்நாடக கல்வித் துறை சேவை விதிகள் 2014-இன்படி, இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் பாட வாரியாக http:kea.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆக.5-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.இதற்குரிய கட்டணத்தை ஆக.6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்தப் பதவிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி