ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ 6வது இடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2015

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ 6வது இடம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான UPSC சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகள் ,இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது.ஆயிரத்து 364 பதவிகளுக்கான போட்டித் தேர்வு கடந்தாண்டு முதல், 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வில் 16ஆயிரத்து 286 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வான 3 ஆயிரத்து 303 பேருக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

நேர்முகத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்., யூபிஎஸ்சி தேர்வு மூலம் 1364 பணியிடங்கள் நிரப்பப்பட்வுள்ளதாக யூபிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சாருஸ்ரீ அகில இந்திய அளவில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி