சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. இநத் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நேற்று இரவுடன் நிறைவடைந்தது.
'இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் 7 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 109 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த 25 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 911 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது.எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு சேராத மாணவர்களால் ஏற்படும் காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்ப அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு செப்டம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் மூன்றாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
'இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் 7 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 109 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த 25 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 911 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது.எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு சேராத மாணவர்களால் ஏற்படும் காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்ப அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு செப்டம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் மூன்றாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி