அருகே இருக்கும் தெருக்களில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும் சாதாரண மாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் போலீஸார் நின்று கொண்டுசோதனை என்ற பெயரில் தங்களை சோதனை செய்வதாக கூறி கஷ்டப்படுத்து வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.புறநகர் காவல் ஆணையராக ஜாங்கிட் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை இருந்தது.அப்போது அது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, “பள்ளிகள், தெருக்கள் மற்றும் வீட்டின் அருகிலேயேசெல்பவர்களை பிடித்து சோதனை நடத்தக் கூடாது” என்று அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் இதுபோன்ற சோத னைகளைநிறுத்தினர். இப் போது மீண்டும் போலீஸார் பள்ளிகள் அருகே நின்று சோதனை என்ற பெயரில் பெற்றோரை கொடுமைப் படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது வரவேற்க வேண்டியதே. ஆனால் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது சிறிய கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. பேருந்து வசதி சரியாக இல்லாத கிராமத்தில், இரு சக்கர வாகனத்தில் உதவி கேட்டுதான் பயணிக்க வேண்டி உள்ளது. ஆனால் இப்போது உதவி கேட்டு பயணிக்க முடியாமல் அவதிபடுகின்றனர்
ReplyDelete