எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இலவச சைக்கிள்வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


இந்த விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது:தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகின்றன. எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை. ஒரேயொரு அரசுப் பள்ளி கூட மூடப்படாத நிலையில், தேர்தலை மனதில் கொண்டே அடிப்படையில்லாத இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 139 நடுநிலைப் பள்ளிகள், 884 உயர்நிலைப் பள்ளிகள், 402 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,530 பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.எந்தவொரு நிதிநிலை அறிக்கையிலும் பாதுகாப்புத் துறைக்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்குத்தான் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டம், லேப்-டாப் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன. பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என்றார்.சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கலைராஜன், தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகவேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி