பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்த 19 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் கல்லூரியில் 19 உதவி பேராசிரியர்களை பல்வேறு தேதிகளில், சட்டவிதிகளை பின்பற்றி நியமித்தோம். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு கல்லூரி கல்வி இயக்குனருக்கு கோரிக்கை மனு அனுப்பினோம்.
ஆனால், அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து மனுவை திருப்பி அனுப்பி விட்டார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாகும் போது, அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இந்த கல்லூரிகளில் 19 உதவி பேராசிரியர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் தராமல் பணி செய்ய சொல்ல முடியாது. எனவே, இந்த 19 பேரது பணி நியமனத்துக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை கல்லூரி உதவி பேராசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் கல்லூரியில் 19 உதவி பேராசிரியர்களை பல்வேறு தேதிகளில், சட்டவிதிகளை பின்பற்றி நியமித்தோம். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு கல்லூரி கல்வி இயக்குனருக்கு கோரிக்கை மனு அனுப்பினோம்.
ஆனால், அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து மனுவை திருப்பி அனுப்பி விட்டார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாகும் போது, அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இந்த கல்லூரிகளில் 19 உதவி பேராசிரியர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் தராமல் பணி செய்ய சொல்ல முடியாது. எனவே, இந்த 19 பேரது பணி நியமனத்துக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை கல்லூரி உதவி பேராசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி