ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 20) வெளியிடப்பட உள்ளது.
சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலைவெளியிட உள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என்றுபல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.இந்த நிலையில், இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக www.tanuvas.tn.nic.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும் என்று துணைவேந்தர் திலகர் தெரிவித்தார்.
சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலைவெளியிட உள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என்றுபல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.இந்த நிலையில், இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக www.tanuvas.tn.nic.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும் என்று துணைவேந்தர் திலகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி