இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2015

இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!

கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள்.


இந்நிலையில், கோவை உட்பட பிற மாவட்டங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம், மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு, 2012 ஜூன் முதல் தேதி, தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. புதிய விதிமுறைப்படி, 2014 ஜூன் முதல் தேதிதகுதி நாளாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடந்தாண்டு, ஜூலை 23ம் தேதி தான்ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஓராண்டுகளாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளவர்கள் மட்டுமே, இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.


இந்நிலையில், கோவையில் நேற்று இடமாறுதல் வேண்டி ஆசிரியர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சில ஆசிரியர்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சர்ச்சை ஏற்பட்டது. தமிழ்நாடு முதுகலைபட்டதாரி ஆசிரியர் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் மைக்கேல்ராஜ் கூறியதாவது:கடந்த ஆண்டு காலதாமதமாக கலந்தாய்வு நடத்தியதற்கு ஆசிரியர்கள் எப்படி பொறுப்பேற்க இயலும்? ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்தி விட்டு, ஜூன், 1ம் தேதியை தகுதி நாளாக அறிவித்துள்ளது சரியல்ல. இதனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2010ல் அரசு உத்தரவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். மே மாதம் கலந்தாய்வுக்கான உத்தரவு பெற்றிருப்பினும், புதிய பள்ளிகளில் ஆக., 2ம் தேதி பணியில் சேர்ந்தோம். 2011ம் ஆண்டிற்கான கலந்தாய்வில், ஆக., 2ல் பணியில் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என, விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால், இம்முறை, தாமதமாக கலந்தாய்வை அரசு நடத்திவிட்டு ஆசிரியர்களை வஞ்சிப்பது சரியல்ல. இதுகுறித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


'விதிமுறைப்படி தான் பணி'


மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கீதா கூறுகையில், ''கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறும் பணி தற்போது நடந்துவருகிறது. முழுமையாக பணி முடிந்த பின்பே, நிராகரித்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை தெளிவாக தெரிவிக்க இயலும்.அரசு விதிமுறைப்படி, ஓராண்டுகள் நிறைவடையாவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விதிமுறைகளின் படி பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

3 comments:

  1. இது எல்லாம் பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகளில் ஒன்று........

    ReplyDelete
  2. ஆம், வல்லவர்களின் செயல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி