செப்.2-ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2015

செப்.2-ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்பு

செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களும் பங்கேற்கின்றன.இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்களின் உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், முதலாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது.தொழிலாளர் சட்டங்களில் முதலாளிகளுக்கு சாதகமான வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய துறைகளில்அளவுக்கு அதிகமான வகையில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதுபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 2-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள் சங்கங்களும் பங்கேற்கின்றன.இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி