மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக உயர்கிறது.


ஜூலை 1ம் தேதி கணக்கிட்டுஇந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.மத்திய அரசின் அறிவிப்பைத்தொடர்ந்து தமிழக அரசும் மாநில அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கும் என்பதால் அரசு ஊழியர்கள் ஆவலுடன் உள்ளனர். ஜூலை 31ல் ஜூன் மாதத்திற்குரிய தொழில் துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் குறியீட்டு எண் வெளியானதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி