பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி.ஆப்டோமேட்ரி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த பட்டப் படிப்புகளுக்குநடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றன.


பூர்த்தி செய்யப்பட்ட 20,940 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தகுதியான 20,130 பேருக்கான தரவரிசைப் பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில் மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது.


இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறாது.இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “ தமிழகத்தில் உள்ள 5 அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி நர்ஸிங் படிப்புக்கு 250 இடங்களும், 2 அரசு கல்லூரிகளில் பி.பார்ம் படிப்புக்கு 120 இடங்களும் உள்ளன. அனுமதிக்கப்பட்ட தனியார் கல்லூரிகளின் விவரம் இன்னும் முழுமையாக வரவில்லை” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி