இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2015

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில், 9.45 லட்சம் பேர் இந்ததேர்வை எழுதவுள்ளனர். கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், 'சிசாட்' என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.


இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தங்களுக்கு தேர்வு எழுத மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என, பல தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 2011ல் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும், இந்த முறையும் தேர்வெழுத மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் நிலை தேர்வு, இன்று நடக்கிறது. நாடு முழுவதும், 9.45 லட்சம் பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள், www.upsc.gov.in என்ற இணையதளத்தில், அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி