செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதி: டிராய் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதி: டிராய் நடவடிக்கை

கூடுதல் வருவாய் பெறும் நோக்கத்தில், செல்போனில் இணையதள சேவையை ‘டிஆக்டிவேட்’ (துண்டித்தல்) செய்யும் நடைமுறையை செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலானதாக வைத்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தது. இதன்படி,


சந்தாதாரர்கள், தங்கள் செல்போன்களில் இணையதள சேவையை ‘ஆக்டிவேட்’ செய்யவோ, ‘டிஆக்டிவேட்’ செய்யவோ, 1925 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தெரிவித்தால் போதும்.இந்த வசதி, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து இந்த கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்புவதாக இருந்தால், இணையதள சேவையை ‘ஆக்டிவேட்’ செய்வதற்கு ‘ஸ்டார்ட்’ என்றும், ‘டிஆக்டிவேட்’ செய்வதற்கு ‘ஸ்டாப்’ என்றும் டைப் செய்து அனுப்ப வேண்டும். அதற்கு சேவை நிறுவனங்கள் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.மேலும், இணையதள சேவையின் பயன்பாட்டு கால அளவு முடிவடைந்தது தெரியாமல் உபயோகிக்கும் சந்தாதாரர்களிடம் செல்போன் சேவை நிறுவனங்கள், கணிசமாக பணம் கறப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.


இதைக்கருத்தில் கொண்டு, பயன்பாட்டு காலத்துக்கு மேல் உபயோகிப்பவர்களிடம், அவர்களின் சம்மதத்தைப் பெறாமல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது.மேலும், இணையதள டேட்டா கார்டின் பயன்பாட்டு காலம் முடிவடையப் போவதை சந்தாதாரர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி