தேர்தல் பணி செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் மாநகராட்சியை அணுகலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2015

தேர்தல் பணி செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் மாநகராட்சியை அணுகலாம்

தேர்தல் பணி செய்ய விருப்பமுள்ள மாநில அரசு ஊழியர்கள் சென்னை மாநகராட்சியைஅணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


மாநில அரசு அலுவலகங்களில் பதிவுரு எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் நிலையில் பணியாற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஊழியர்கள் சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


அவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே அலுவலக பணிநேரம் தவிர்த்து இதர நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் வாக்குச்சாவடி அலுவலராக தேர்தல் பணியாற்றலாம். வாக்குச்சாவடி அலுவலராக பணிபுரியும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.அலுவலக பணிநேரம் தவிர்த்து இதர நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் வாக்குச்சாவடி அலுவலராக தேர்தல் பணியாற்றலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி