"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2015

"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு'

பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்ச்சி பெற வைக்கும் கொள்கையை மத்திய அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நமது நாட்டில் தொடக்கநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொடக்க நிலை கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, முந்தைய அரசுகளால் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும்கொள்கையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம்.முந்தைய அரசுகளின் கொள்கைப்படி, 8ஆம் வகுப்பு வரை வெற்றி பெறச் செய்ய வைக்கப்படும் மாணவர்கள், 9ஆம் வகுப்பில் திறன்பட செயல்படுவதில்லை என்று ஆசிரியர்களும், பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. அனைவருக்கும் தேர்ச்சி என்பதனை சில மாணவர்களும் பெற்றோர்களும்,தவறாகவே பயன் படுத்துகிறார்கள்.ஒரு கல்வியாண்டில் ஒரு சில நாட்களே பள்ளிக்கு வருகை தந்துவிட்டு அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறுகிறார்கள்.அந்த மாணாவனுக்கு அடிப்படை அறிவு எவ்வாறு கிடைக்கும். இளம் பருவத்திலேயே மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண் டியது அவசியம். எனவே எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது நன்மையைத்தரும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி