பி.எட் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க செப்.11 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2015

பி.எட் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க செப்.11 கடைசி நாள்

பி.எட். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க செப்டம்பர் 11 கடைசி நாளாகும்.தமிழகத்தில் உள்ள 7 அரசுக் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2 ஆயிரம் பி.எட் (கல்வியியல் இளங்கலை படிப்பு) இடங்கள் உள்ளன. பி.எட் படிப்பில் சேர குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 3-ம் தேதி முதல் இன்று மாலை வரை விநியோகம் செய்யப்பட்டு வந்தன. சென்னையில் 2 மையங்கள் உட்பட தமிழ்நாட்டில் 13 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழகத்தில் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, நேற்று வரை 7500விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளை ( செப்.11) மாலை 5 மணிக்குள் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு இந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புபிரிவினருக்கான கலந்தாய்வு முதல் நாளான 28-ம் தேதி நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி