
செப்டம்பர் 11, 1921, மகாகவி பாரதியார் மறைவுஎழுச்சியூட்டும் பாடல் வரிகள் மூலம் மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய மகாகவி சுப்ரமணிய பாரதியார், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில்தான் உயிரிழந்தார்.
1882ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், ஏராளமான பாடல்களைப் எழுதினார். சிறு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்ததால் பாரதி என அழைக்கப்பட்டார்.
எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராக இருந்த பாரதி, 1904 ஆம் ஆண்டு சுதேசமித்ரன் பத்திரிக்கையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டுப்பற்றுப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற சிறந்த படைப்புகள் மூலம், தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாரதியார். 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில்தான், சென்னை திருவல்லிக்கேணியில் மறைந்தார்.செப்டம்பர் 11, 2001, உலக வர்த்தக மைய தாக்குதல்அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, இரட்டைக் கோபுர தாக்குதல் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில்தான் நடந்தது. அமெரிக்காவை பழிவாங்குவதற்காக, 19 அல்கய்தா தீவிரவாதிகள், 4 பயணிகள் விமானங்களை, கடத்தினர்.
அவற்றில் இரண்டு விமானங்களை, நியூயார்க் நகரின் இரட்டைக்கோபுரங்கள் மீது மோதச் செய்து 100 மாடிக் கட்டத்தை தகர்த்தனர்.ஒரு விமானம் ராணுவ தலைமையகமான பென்டகனை தாக்கியது. மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் நொறுங்கியது. காலை 8:56 க்கு தொடங்கி. 10:03 க்குள்நிகழ்ந்த இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். வல்லரசுஅமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதல், உலக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி