ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2 நாளில் அரசு அறிவிக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2 நாளில் அரசு அறிவிக்கும்

முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு 2 நாளில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இது தொடர்பாக விரிவாக ஆலோசித்து சிலமுடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது. முன்னாள் ராணுவத்தினரின் சில கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது.


சிலவற்றை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஓய்வூதியம் திருத்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது; ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருத்தியமைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டில் அரசு உறுதியுடன் உள்ளது. மற்ற துறை ஊழியர்களின் ஓய்வூதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் திருத்தியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும் முன்னாள் ராணுவத்தினருக்கு, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் சராசரியாக நிர்ணயிக்கப்படும்.


சராசரியை விட அதிகமாக ஓய்வூதியம் பெறுபவருக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைக்கப்படமாட்டாது. இது தொடர்பான அறிவிப்பு 2 நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டு மாதமாக நடத்தி வரும் போராட்டத்துக்கு இதன் மூலம் முடிவு வரும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி