17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 15 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3-ம் கட்டகலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவன் கூறும்போது, “மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இடங்கள் இன்னும் திருப்பி அளிக்கப்படவில்லை. அதனால்மூன்றாம் கட்ட கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் இடம்பெறாது” என்றார்.
17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 15 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3-ம் கட்டகலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவன் கூறும்போது, “மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இடங்கள் இன்னும் திருப்பி அளிக்கப்படவில்லை. அதனால்மூன்றாம் கட்ட கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் இடம்பெறாது” என்றார்.
This comment has been removed by the author.
ReplyDelete