காவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

காவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்!!!

அனைத்துக் காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.செüந்தரராஜன் பேசும்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.


முக்கியமான தெருக்களிலும் அந்த கேமராக்கள் பொருத்தினால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றார்.அப்போது, ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசியதாவது:ரூ. 1.75 கோடி செலவில் மாநிலத்தில் 251 காவல் நிலையங்களுக்கு, 251 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் மீதமுள்ள 1,316 காவல் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அது நிறைவேற்றப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி