தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தி, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, முற்றுகைப் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர் ஜனார்த்தனன் தலைமையில், அரசுப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து, அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என, கண்ணப்பன் உறுதி அளித்தார். இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறியதாவது: தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, பி.இ.,-பி.டெக்., படிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், தொழிற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள, 300 தொழிற்கல்வி ஆசிரியர் இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டி, முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்களைப் போல, முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Sep 16, 2015
Home
kalviseithi
இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.
இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி