நாடு முழுவதும் டிச. 1, 2 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

நாடு முழுவதும் டிச. 1, 2 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளன.இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது துணை வங்கிகளை மூடுவது அல்லது இணைப்பது என்ற முடிவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், அந்த வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இணைப்பதற்கு பதிலாக அந்த வங்கிகளை தனி வங்கிகளாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், அந்த வங்கிகள் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும்.ஊழியர்களின் நலனுக்காக போராடி வரும் சங்கங்களின் உரிமையை பறிக்கும் செயல் களில் வங்கி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து வங்கிகளிலும் ஊழியர்களின் வீட்டுக் கடன் வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் வீட்டுக் கடன் வரம்பு அதிகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசின் விதிமுறை களை வங்கிகள் பின்பற்ற வேண்டும்.


பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாநில வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் டிச.2-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும். மேலும், இதுகுறித்து அக்.26-ம் தேதி (இன்று) முதல் தொடர் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு அறிக்கையில் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி