புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும்ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும்ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா.

மார்ச் 2015-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுபொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் தாங்கள் கற்பித்தபாடங்களில் 100 சதவீத தோ்ச்சி மற்றும் 100க்கு100, 200க்கு 200 பெற்றுத்தந்தஆசிரியா்கள், மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியா் விருதுபெற்றஆசிரியர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவ,மாணவிகளை சாதனை பெறச்செய்த உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று 09-10-2015 மாலை 3.00 மணியளவில் புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.


விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் தலைமைதாங்குகிறார். விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலா்திருமதி செ.சாந்தி வரவேற்று பேசுகிறார். இவ்விழாவில் ஆதிதிராவிடா் மற்றும்பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மாண்புமிகு ந.சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வுமற்றும் குடும்பநல்வாழ்வுத்துறை அமைச்சா் மாண்புமிகு டாக்டா் சி.விஜயபாஸ்கா்ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டு பெறும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி விழாப்பேரூரை ஆற்றுகிறார்கள்.


இவ்விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினா்திரு ப.குமார், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா்வி.ஆா்.கார்த்திக்தொண்டைமான், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினா் திரு கு.ப.கிருஷ்ணன், திருமயம் சட்டமன்ற உறுப்பினா் திரு பி. கே. வைரமுத்து, அறந்தாங்கிசட்டமன்ற உறுப்பினா் திரு மு. ராஜநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்துபேசுகிறார்கள். இந்த விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவா் திரு வி.சி.ராமையா,புதுக்கோட்டை நகராட்சித்தலைவா் திரு ரா.ராஜசேகரன், மாவட்டஊராட்சித்துணைத்தலைவா் திரு ஆா்.சந்திரன், புதுக்கோட்டை நகராட்சித்துணைத்தலைவா் திரு எஸ்.ஏ.எஸ். சேட்(எ) அப்துல்ரஹ்மான், 40-வதுவார்டு நகராட்சி உறுப்பினா் திருமதி ஈஸ்வரிநடராஜன், புதுக்கோட்டை மாவட்டகூடுதல் முதன்மைக்கல்வி அலுவலா் திரு க.கணேசன், புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்(பொ) திருநா.செல்லத்துரை, புதுக்கோட்டை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருஅ.ஜேக்கப், புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலா் திருமா.தமிழ்செல்வன், அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் திருஆா்.சண்முகம், மவுண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளா் திருஜெயபாரதன் செல்லையா, ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.


நிறைவாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் திரு.ப.மாணிக்கம் நன்றிகூறுகிறார்.


இவ்விழாவில் மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியா் விருதுபெற்ற 14 ஆசிரியா்கள். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சிபெற்ற 102 பள்ளிகளின் தலைமையாரியா்கள், பன்னிரெண்டாம் வகுப்பு அரசுபொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற 23 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள்,100 சதவீத தோ்ச்சி மற்றும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுத்தந்த 1093 பட்டதாரிஆசிரியா்கள், 100 சதவீத தோ்ச்சி மற்றும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுத்தந்த 383 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்.மாநில,தேசியஅளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெறச்செய்த 37உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்,ஆகியோர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள10க்கும் மேற்பட்ட குழுவினா் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி