ஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2015

ஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.

ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையைஅறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) வைத்து இருப்பர்வார்களுக்கு 2G, 3G மற்றும் 4G பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்தசலுகை உண்டு.


ஒவ்வொரு நாளும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நீங்கள் செலவு செய்த டேட்டாவில் 50 சதவீதம் டெட்டவை ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும். நீங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1GB (1024MB)டேட்டா நீங்கள் செலவு செய்து இருந்தால் மறுநாள் காலை உங்களுக்கு 50% அதாவது 512MB டேட்டா உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். வரவு வைக்கப்பட டெட்டவை நீங்கள் எப்போது வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த சலுகைக்கு 28 நாட்களுக்கு மட்டும் அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் ரீசார்ஜ் செய்த பிறகு இதனை ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியுமாம்.


எப்படி Activate செய்வது?


நான்கு வழிகளில் Activate செய்யலாம்.

1. உங்கள் ஏர்டெல் மொபைலில் SMS மூலம் NIGHT என டைப் செய்து 121 என்ற நம்பருக்கு அழுத்தினால் உடனே Activate ஆகிவிடும்.

2. உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து 55555 என்ற நம்பருக்குகால் செய்தாலும் ஆக்டிவேட் ஆகிவிடும்.

3. My Airtel App மூலம் Activate செய்யலாம்,

4.இங்கே கிளிக்செய்து ஏர்டெல் தளத்தில் சென்றும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Activate செய்ய முடியும்


.இதை தவிர ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் மேலும் பேசுகையில் புதிய மொபைல் இணைப்புகளுக்கு பல சிறப்பு பரிசுகள், சர்பிரைஸ் வழங்க இருக்கிறோம் என்றார்.


குறிப்பு:இன்று காலை ஆறு மணிக்கு பிறகு நேற்று இரவு 12 மணிக்கு பிறகு நான் பயன்படுத்திய 180MBயில் 50% 90MBதிரும்ப பேலன்ஸ்ல சேர்த்து விட்டார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி