6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2015

6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்

விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.


பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமைநடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 3 பேர் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.ஊதிய உயர்வுக்காக பதவி உயர்வை துறந்த ஆசிரியர்கள்: ஒரு பள்ளியில்10 ஆண்டுகள் வரை பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அளிக்கப்படுகிறது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி உயர்வுக்கு முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பலருக்கும், 6 மாதங்களில் தேர்வு நிலை அளிக்கப்பட உள்ளது.தேர்வு நிலை கிடைக்கும்போது, ஊதியத்தில் 6 சதவீதம் உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில், பதவி உயர்வு கிடைத்தால் 3 சதவீதம் மட்டுமே ஊதியம் உயரும். இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான தாற்காலிக உரிமைவிடல் அடிப்படையில் கலந்தாய்விலிருந்து வெளியேறியதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

6 comments:

  1. எனக்கு ஊதிய உயர்வு வேண்டாம்.பதவி உயர்வு கிடைக்குமா?

    ReplyDelete
  2. உங்களுடைய பதவி மற்றும் பனியில் சேர்ந்த நாள் தகுதி

    ReplyDelete
  3. • REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:

    ஒரு எளிய சட்ட விள‌க்கம் :

    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
    வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
    இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
    கூறியிருக்க வேண்டும்.


    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.


    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
    பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
    சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.


    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:


    judgement 1

    669 vacancies filled by = general 69% reservation act[all
    castes ]


    judgement 2

    669 vacancies filled by = sc &sca only


    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
    அது தவறான தீர்ப்பு ஆகும்.

    அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?



    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
    பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
    ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?


    அதாவது

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste


    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
    அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.




    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    ReplyDelete
  4. சார் நானும் உங்க கட்சி தான் !! நான் வேண்டாம் என்று சொன்னது 3 சதவீத ஊதிய உயர்வு. கேட்டது பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு.

    ReplyDelete
  5. சார் நானும் உங்களில் ஒருவர் தான். நான் வேண்டாம் என்றது 3 சதவீத ஊதிய உயர்வு. வேண்டும் என்றது பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு.

    ReplyDelete
  6. டெட தேர்வு வருமா.?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி