மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை காலம் முடிந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்துதிரும்பக் கிடைத்த, 77 இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஓமந்துாரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி உட்பட, 21அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.


மொத்தமுள்ள, 2,655 இடங்களில், 15 சதவீதமான, 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்பட்டது.2,257 மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், மாநிலத்துக்கே திரும்பக் கிடைக்கும். அதையும் சேர்த்து, செப்., 30க்குள், இறுதிக் கலந்தாய்வு நடத்தப்படும்.அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள, எம்.பி.பி.எஸ்., - 67; பி.டி.எஸ்., - 7 என, 74 இடங்கள், நேற்று தான், திரும்பக் கிடைத்தன. ஆனால், மாணவர் சேர்க்கைக்கு, நேற்று தான் கடைசி நாள் என்பதால், இந்த இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''நேற்று மதியம் தான், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் திரும்ப கிடைத்தன. அரை நாளுக்குள்மாணவர்களை சேர்க்க சாத்தியமில்லை. அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி