தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை மையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர்ரமணன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.


பருவமழை இயல்பு நிலையில் இருக்கும்.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறாமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.நேற்று (செவ்வாய்கிழமை) நிலவரப்படி அதிகபட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி