குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும்; கடந்த ஆண்டை விட அதிகமாக, அரசு பள்ளி மாணவர்கள் மாநில, 'ரேங்க்'கை எட்டவும், பள்ளி கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் முக்கியகேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய புத்தகம், அதிக மதிப்பெண்கள் தரும் கேள்வி - பதில்கள் அடங்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாலை நேர வகுப்பு மற்றும் விடுமுறை கால வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


இந்நிலையில், மூன்று மாதங்களில் நடத்திய பருவத்தேர்வு மற்றும் சமீபத்தில் முடிந்த காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஒப்பிட்டு, பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காண, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், பின்தங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் தரவும், பெற்றோரை அழைத்து கலந்தாய்வு நடத்தி, தங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பயிற்சி தரும்படி அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி