அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எமராஜன் தலைமை வகித்தார்.


விருதுநகர் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ச.கண்ணன், மாவட்ட தலைவர் முத்துராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.பொதுச்செயலாளர் க.லட்சுமணன், எதிர்கால நடவடிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 17 மாவட்டங்களில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர்களை கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் லோகராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி