3 நாட்களுக்கு கன மழை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2015

3 நாட்களுக்கு கன மழை

'வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்றுஅழுத்த தாழ்வு நிலையாக மாறுவதால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:


வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறி வருகிறது. இதனால் அந்தமான் கடல் பகுதியில் மழை பெய்ய துவங்கி விட்டது.


தமிழகம் நோக்கி: இந்த காற்று அழுத்த தாழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்.தற்போதுள்ள வானிலை நிலவரப்படி அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு, வட சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் இடையே டிச., 1ல் கரையை கடக்கலாம் என, கணிக்கப்படுகிறது. எனவே அதுவரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.அமெரிக்க வானிலை கணிப்பு மையமும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு குறித்து கணித்துள்ளது. அந்த கணிப்புப்படி தமிழகத்தின் வட கடலோர பகுதியில் டிச., 5 வரை கன மழை பெய்யும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிம்மதி: இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தணிந்து வெயில் பதிவானது.


இது தேங்கியிருந்த மழை நீர் வடிய வாய்ப்பாக இருந்தது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் - 10; திருசெந்துார் - 2; ராமேஸ்வரம், குன்னுார் - 1 செ.மீ., மழை பெய்துள்ளது.குளிர் : தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் குளிர் துவங்கி உள்ளது. தர்மபுரி, வேலுார் மாவட்டம், திருப்புத்துாரில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி