அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்

லட்சத்தீவில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்,


"மேலடுக்கு சுழற்சியானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது.இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


அதேவேளையில் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்துவிட்டது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி