பள்ளிக்கு நீண்ட நாட்களாக வராத குழந்தைகள், படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,), 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், படிப்பை கைவிட்ட குழந்தைகளுக்குமீண்டும் கல்வி வாய்ப்பு அளித்தல், எஸ்.எஸ்.ஏ., முக்கிய பணி.தற்போது, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம், தற்போது படிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, படிப்பை கைவிட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகள், அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வகுப்பு ஆசிரியர் மூலம், இவ்விவரங்கள் சேகரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.ஏ., அலுவலர் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் வீதி வீதியாக சென்று, படிப்பை கைவிட்ட குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
Nov 30, 2015
Home
kalviseithi
படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை
படிப்பை கைவிட்ட குழந்தைகள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி