அரசுத் தேர்வுகளுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2015

அரசுத் தேர்வுகளுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இ-சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திஅறிக்கை:


மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவைமையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பித்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், நகல் பெறுதல்ஆகிய சேவைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30, விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5, நகல் பெற ரூ.20 கட்டணமும், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இந்த சேவை மூலம் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி