கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2015

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.தேசிய தேர்வு சேவை மைய தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார்.


பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், “கற்றல் திறன் குறைபாடுகளால் ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் 4.6 சதவீதமே படிக்கின்றனர். ஆந்திரா, உ.பி., ம.பி., பீஹார் மாநிலத்தவர் அதிகம் படிக்கின்றனர். தமிழக மாணவர்கள் நுழைவதற்கு மனப்பாட முறையே தடையாக உள்ளது”, என்றார்.திரும்ப திரும்ப தேர்வுதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி.,) மைசூர் மண்டல இயக்குனர் ராவ் பேசியதாவது: பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு முறைகள், மதிப்பிடுதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த தேர்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும். பாடம் குறித்த புரிதல் ஏற்படும் வரை திரும்ப திரும்ப மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனை முறைகள், ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது இல்லை. இது எதிர்காலத்தில்மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை பாதிக்கும்.


இசை, நடனம், ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன்களை மதிப்பிடப்படவேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு கற்றலில் உற்சாகம் பிறக்கும். தமிழகத்தில் ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லுாரிகள் நிறைந்துள்ளன. ஆனால் அங்கிருந்து திறமையான ஆசிரியர்கள் வெளியேறுவது இல்லை. ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளே தேர்ந்த மாணவர்களை உருவாக்கும், என்றார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜாகிதாபேகம், உதவிப் பேராசிரியர் முருகன் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி