TNPSC குரூப்-2ஏ தேர்வு: 8 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2015

TNPSC குரூப்-2ஏ தேர்வு: 8 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகிய பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது.


பட்டப் படிப்பை கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்டோபர் மாதம் 12-ம் தேதி தொடங்கியது.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தேர்வர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு நவம்பர் 11-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது. குரூப்-2ஏ தேர் வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப் பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி