வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிஉள்ளது,வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2015

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிஉள்ளது,வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது என்றும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. குமரிகடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில்மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குமரிகடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையுடன், தென்மேற்கு வங்க கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையில் வட கடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைநீடிக்கும். சென்னையை பொருத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி