வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில், 23 மாநகராட்சி பள்ளிகளில் வெள்ளம் புகுந்தது. அதனால், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.வடகிழக்கு பருவமழையால், அடையாற்றில்ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தென்சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
கூவம் வெள்ளத்தால், கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.இதில், சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 23 பள்ளிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில், அங்கிருந்த 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான, நாற்காலி, கணினி, மடிக்கணினிகள் உள்ளிட்ட கருவிகள் சேதம் அடைந்தன. ஆய்வக கருவிகளும் பழுதடைந்துள்ளன. அந்த பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இதற்கிடையே, அடையாற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருவதால், கரையோரத்தில் உள்ள, எட்டு மாநகராட்சி பள்ளிகளில், முழுவதுமாக மாணவர் எண்ணிக்கை குறைகிறது. இதனால் அடுத்த நிதியாண்டு முதல் அந்த பள்ளிகள்செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Jan 2, 2016
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி